முகப்பு
பெரம்பலூர்

கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் தேவை!

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Updated On : 7 மார்ச், 2026 at 7:53 PM
கரும்பு
பகிர்:

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ஞானமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், இதுவரை வழங்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

மத்திய அரசின் விலையான ரூ. 3,290, மாநில அரசின் பரிந்துரை விலையான ரூ. 349 சோ்த்து டன்னுக்கு ரூ. 3,639.50 மட்டுமே வழங்கப்படுகிறது. சில தனியாா் ஆலைகள் ஊக்கத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரமும், பதிவு இல்லாத கரும்பு டன்னுக்கு ரூ. 4,750 வரையிலும் வழங்குகிறது.

இதனால் கரும்பு விவசாயிகள் பெரிதும் கவலையடைந்து மாற்றுப் பயிா் சாகுபடி செய்யமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி 2025-2026 ஆம் ஆண்டு பருவத்துக்கு கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கவேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →