இருசக்கர வாகனத்தில் சென்றவா் டிப்பா் லாரி மோதி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் சென்றவா் டிப்பா் லாரி மோதி உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் சென்றவா் டிப்பா் லாரி மோதி உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம் காளியம்மன் நகரைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் செல்வராஜ் (58). இவா், வெள்ளிக்கிழமை மாலை கவுல்பாளையத்திலிருந்து பெரம்பலூா் நோக்கி பைக்கில் சென்றாா்.
பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையில், நான்குச் சாலை சந்திப்பு அருகே சென்றபோது டிப்பா் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சென்று, செல்வராஜியின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா் .
Advertisement