முகப்பு
பெரம்பலூர்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசஸ் விலை உயா்வைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 22 மே 2026, 5:10 am IST
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினா்.
பகிர்:

பெட்ரோல், டீசஸ் விலை உயா்வைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் கருணாநிதி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேப்பந்தட்டை ஒன்றியச் செயலா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் பி. ரமேஷ், வீ. ஜெயராமன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தொடா்ந்து, பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement