ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் பொன்னமராவதி வட்ட கிளை சார்பில், பொங்கல் போனஸ் ரூ. 3000 வழங்கக் கோரி
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் பொன்னமராவதி வட்ட கிளை சார்பில், பொங்கல் போனஸ் ரூ. 3000 வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் இ. சிவன்பிள்ளை தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் சி. மணிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் எ. மலர்விழி விளக்கவுரையாற்றினார்.