புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை காலை வீட்டருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் ஊராட்சி அரண்மனைத்தோப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் திவகாரன்(3) . வீட்டருகே இவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருந்த சுமார் 4 அடி தண்ணீர்த் தொட்டியில் தவறிவிழுந்து இறந்தான். இதைக் கவனிக்காத அவரது பெற்றோர் வெகுநேரமாக சிறுவனைக் காணவில்லையென பல இடங்களில் தேடினர். பின்னர் சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் இறந்து கிடந்தது தெரியவந்தது. வடகாடு போலீஸார் விசாரிக்கின்றனர்.