புதுக்கோட்டை

தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் சாவு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை காலை வீட்டருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் ஊராட்சி அரண்மனைத்தோப்பைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன்  திவகாரன்(3) .  வீட்டருகே இவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருந்த சுமார் 4 அடி தண்ணீர்த் தொட்டியில்  தவறிவிழுந்து இறந்தான். இதைக் கவனிக்காத அவரது  பெற்றோர் வெகுநேரமாக சிறுவனைக் காணவில்லையென பல இடங்களில் தேடினர். பின்னர் சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் இறந்து கிடந்தது தெரியவந்தது. வடகாடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT