புதுக்கோட்டை

புதுகை மன்னர் கல்லூரி மாணவர்கள் தர்னா

DIN

நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக  மன்னர்  கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து  செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  புதுகை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்துக்கும் எதிராகப் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் புதுகை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தினுள் அமர்ந்து தர்னாப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். சுமார் 1 மணி நேரம்  நடத்தப்பட்ட போராட்டத்துக்குப்பிறகு, அனைத்து இளங்கலை மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு கல்லூரியிலிருந்து திரும்பிச்சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT