புதுக்கோட்டை

பஸ் மோதி பள்ளி மாணவர் சாவு

DIN

விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை பேருந்து மோதி  1-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.

விராலிமலை - மணப்பாறை சாலை ராஜாளிப்பட்டி அருகேயுள்ள ஓணான்மடையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கார்த்திகேயன் (4).  மணப்பாறை தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை பள்ளியிலிருந்து பேருந்தில் வந்த கார்த்திகேயன் ராஜாளிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மணப்பாறை சாலையில் உள்ள தனியார் பேப்பர் மில் அருகே சாலையை கடக்க முற்பட்டபோது தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார்.
தகவலறிந்த விராலிமலை போலீஸார் சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பேருந்து ஓட்டுநரான இலுப்பூரைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஏசுராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT