முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே மர்மக் காய்ச்சலுக்கு சிறுவன் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
 ஆலங்குடி அருகேயுள்ள குலமங்களம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராசு மகன் கருப்பையா(14). அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்றுவந்த இவருக்கு, கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். 
காய்ச்சலின் தீவிரம் குறையாததால், மேல்சிகிச்சைக்காக நவம்பர் 9 ஆம் தேதி தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த கருப்பையா வியாழக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →