அன்னவாசலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அன்னவாசல் சமத்துவபுரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் போலீஸார், பொதுமக்கள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம், லெமன் ஸ்பூன், கோலப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளை அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள், போலீஸார் கலந்து கொண்டனர்.