புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் உள்பட 3 பேர் கைது

DIN

புதுக்கோட்டையில்  மதுபானக்கூடங்களில் ரூ.8,36,500  வசூல் செய்த டாஸ்மாக் மேலாளர் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
புதுக்கோட்டையில் ஏலம் விடப்படாமல் இயங்கிவரும்  மதுபானக்கூடங்களில் டாஸ்மாக் அதிகாரிகள் லஞ்ச வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போஸலீஸாருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 
 இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்த டாஸ்மாக் மேலாளரின் காரை திடீரென வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது அந்த காரில், ரூ.8,36,500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது.  இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் மேலாளர் மதிசெல்வம், மேற்பார்வையாளர்களான மணிவண்ணன், முருகசேன் ஆகிய 3 பேரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT