புதுக்கோட்டையில் மதுபானக்கூடங்களில் ரூ.8,36,500 வசூல் செய்த டாஸ்மாக் மேலாளர் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
புதுக்கோட்டையில் ஏலம் விடப்படாமல் இயங்கிவரும் மதுபானக்கூடங்களில் டாஸ்மாக் அதிகாரிகள் லஞ்ச வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போஸலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்த டாஸ்மாக் மேலாளரின் காரை திடீரென வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது அந்த காரில், ரூ.8,36,500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் மேலாளர் மதிசெல்வம், மேற்பார்வையாளர்களான மணிவண்ணன், முருகசேன் ஆகிய 3 பேரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.