புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே  மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
 ஆலங்குடி அருகேயுள்ள கூழையன்காட்டைச் சேர்ந்தவர் நாகேஷ்(38). அரசுப் பள்ளி ஆசிரியர். 
இவரது மனைவி நிர்மலா(30). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் இருவருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை நிர்மலா வீட்டில் தூக்கு மாட்டி இறந்து கிடந்தார்.
இதைத் தொடர்ந்து, நிர்மலாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், 
சாவுக்கு காரணமான கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலையச் செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய ஆலங்குடி போலீஸார், நிர்மலாவை தற்கொலைக்கு தூண்டியதாக நாகேஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT