அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் நை. முகமது பாரூக் தலைமை வகித்தார், கல்லூரி முதல்வர் செ. ராபர்ட் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக நைனாமுகமது கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜாய்சி ஜெ. மனோகரன் சிறப்புரையாற்றினார். கணிதத் துறைத் தலைவர் பேராசிரியர் ஆர். காயத்திரி வரவேற்றார். தமிழ்த் துறை பேராசிரியர் பி. கஸ்தூரி நன்றி கூறினார்.