பைக் மீது கார் மோதியதில் விவசாயி சாவு
ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகே வடவாளத்தைச் சேர்ந்த விவசாயி எம்.தெட்சிணாமூர்த்தி(55). இவர் மோட்டார் சைக்கிளில் கூழையான்விடுதிக்கு சென்ற போது, அவ்வழியாகச் சென்ற கார் மோதியதில் பலத்த காயமடைந்த தெட்சிணாமூர்த்தி நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.