அய்யனார் கோயிலில் சிறப்பு வழிபாடு
பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி குமரமுடைய அய்யனார் கோயிலில் பொங்கல் விழா மற்றும் பழச்சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி குமரமுடைய அய்யனார் கோயிலில் பொங்கல் விழா மற்றும் பழச்சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கண்டியாநத்தம் முத்தரிகாடன் சார்பில் பொங்கல்கூடைகள் எடுத்துச்சென்று உலகம்பட்டி குமரமுடைய அய்யனார் கோயிலில் உள்ள அய்யனார், சூலப்பிடாரி, மற்றும் ஊர்க் காவலன் சுவாமிகளுக்கு பழச்சிறப்பு நடத்தி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி கண்டியாநத்தம் கிராமத்தில் நாடகம் நடைபெற்றது.