புதுக்கோட்டை

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

DIN

பொன்னமராவதி வலையபட்டி மெய்யப்பா வள்ளியம்மை காஞ்சி சங்கர வித்யாலயா மெட்ரிக் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
காந்திசிலை அருகே தொடங்கிய பேரணி அண்ணா சாலை, பேருந்து நிலையம், நாட்டுக்கல் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே வந்து வலையபட்டியில் நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பிளாஸ்டி தீமைகள், சுற்றுப்புறத் தூய்மையின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் அடங்கிய பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனர். 
பள்ளி முதல்வர் ச.ஜீவானந்தம், நிர்வாக அலுவலர் பாண்டியன், துணை முதல்வர் எம். மகாலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT