புதுக்கோட்டை

திமுக -அதிமுகவினர் மோதல்: 3 பேர் காயம்

DIN


ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் வாக்குசேகரிப்பதில் அதிமுக, திமுகவினரிடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.
ஆலங்கேயுள்ள கொத்தமங்கலத்தில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவுக்கு வாக்குசேகரிக்கும் பணியில் அதிமுகவினரும், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு திமுகவினர் வாக்குசேகரிக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாக்கு சேகரிக்க வந்தவர்களிடம் அப்பகுதி பெண்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சமாக நிவாரணம் வழங்கப்பட்டதாக புகார் தெரிவித்தனராம். அதற்கு அதிமுகவினர்தான் காரணமென திமுகவினர் கூறினாராம். இதனால், செவ்வாய்க்கிழமை மாலை இருகட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில், அதிமுகவைச் சேர்ந்த மதியா, சங்கர், திமுகவைச் தமிழரசன் ஆகிய மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் கீரமங்கலம் போலீஸார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT