புதுக்கோட்டை

இருவேறு இடங்களில் விபத்து: பக்தர்கள் இருவர் பலி

DIN

விராலிமலை அரு கே ஞாயிற்றுக்கிழமை இருவேறு இடங்களில் நேர்ந்த சாலை விபத்தில், பாதயாத்திரையாக சமயபுரம் கோயிலுக்கு சென்ற 2 பெண் பக்தர்கள் பலியாகினர். 
திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகேயுள்ள மேடு காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி லட்சுமி(45). இவரும், அதே ஊரைச் சேர்ந்த எம்.சின்னம்மாளும்(47), சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு விராலிமலை-திருச்சி நான்குவழிச்சாலை வழியாக பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர்.
கொடும்பாளூர் அருகே சென்றபோது இவர்கள் மீது அவ்வழியே சென்ற இரு சக்கர வாகனம் மோதியது. இதில் காயமடைந்த லட்சுமி, சின்னம்மாள் ஆகிய இருவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு லட்சுமி  உயிரிழந்தார்.
இதேபோன்று, சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சென்ற விராலிமலை அருகேயுள்ள பசுநக்கிப்பட்டியைச் சேர்ந்த மூக்கன் மனைவி நீலம்மாள்(60), வாடியங்குளம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவ்விரு சம்பவங்கள் குறித்தும் விராலிமலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT