புதுக்கோட்டை

ஐடிஐ-களில் சேர 3-ஆம் கட்ட  கலந்தாய்வு

DIN


புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மூன்றாம் கட்ட மாவட்ட கலந்தாய்வில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2019 சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தற்போது புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் 3 இடங்களும், விராலிமலை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் 12 இடங்களும்,  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மொத்தம் 210 இடங்களும் காலியாக உள்ளன.

இந்தக் காலியிடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் ஆக. 20 ஆம் தேதி வரை இணையதள முகவரி  w‌w‌w.‌s‌k‌i‌l‌l‌t‌r​a‌i‌n‌i‌n‌g.‌t‌n.‌g‌o‌v.‌i‌n இல் விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு நடைபெறும் தகவல் பின்னர் அனுப்பி வைக்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது 04322 -221584 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT