புதுக்கோட்டை

கஜா புயலில் பாதித்தவர்களுக்கு இலவச வீடுகள் வழங்கல்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவசமாக கட்டப்பட்ட இரண்டு வீடுகள் செவ்வாய்க்கிழமை பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னையைச் சேர்ந்த எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகள் கட்டித் தரப்படவுள்ளன.
இதில் முதல் கட்டமாக 10 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் அண்மையில் தொடங்கின. 
இவற்றில், புதுக்கோட்டை ஒன்றியம், உப்புப்பட்டியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மனைவி கல்யாணிக்கான வீடும், திருவரங்குளம் செல்வராசு மனைவி பாண்டிச்செல்விக்கான வீடும் கட்டுமானப் பணிகள் முடிந்து செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
இந்த வீடுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் நா. முத்துநிலவன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் எய்டு இந்தியா நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. ராஜா, நிர்வாகிகள் சுவாமிநாதன், சுப்பிரமணியன், வனச்சரக அலுவலர் தாமோதரன், கவிஞர் கவிவர்மன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலர் டி. சலோமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT