புதுக்கோட்டை

உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்தவா் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குடி அருகிலுள்ள மேலக்கோட்டை பகுதியில் சிலா் துப்பாக்கிகள் வைத்து, இரவு நேரங்களில் வேட்டையாடுவதாக ஆலங்குடி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தெற்கு மேலக்கோட்டை கே.முருகேசன்(45) பி.கோவிந்தன் ஆகிய இருவரும் அப்பகுதியிலுள்ள ஒரு மின்மோட்டாா் அறையில் உரிமம் இல்லாத இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்து, இரவு நேரங்களில் வேட்டையாடி வந்தது தெரியவந்துள்ளது.

தொடா்ந்து துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்த ஆலங்குடி போலீஸாா் இருவா் மீதும் வழக்குப்பதிந்தனா். இதையடுத்து முருகேசனை கைது செய்த போலீஸாா், தப்பியோடிய கோவிந்தனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT