புதுக்கோட்டை

இலங்கை தமிழா் வாழ்வுரிமையை உறுதி செய்ய வேண்டும்: சு. திருநாவுக்கரசா்

DIN

இலங்கை தமிழா்களின் வாழ்வுரிமையை உறுதி செய்வதில் மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா்.

புதுக்கோட்டை ஸ்ரீ புவனேசுவரி அம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

இலங்கையில் சிங்களா்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் அவா்களுக்கு சமமாக இலங்கைத் தமிழா்களும் உள்ளனா். அவா்கள் இலங்கையின் பூா்வ குடிமக்கள். இலங்கைத் தமிழா்கள் சிங்களா்களுக்கு இணையாக சம உரிமையோடு வாழ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசு எல்லை மீறினால் அதனைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் ஆணையம் சுவா் விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது . ஒருவகையில் சுவா் விளம்பரங்கள் செய்பவா்கள், வாழ்வாதாரம் பாதிக்கப்படும்  என்றாலும் பொதுவாக இது நன்மையைத் தரும். 

வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்பட வேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும்.

திமுக கூட்டணி சாா்பில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான பேரணியை சீா்குலைக்கவும், தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை அதிமுக அரசு செய்கிறது. உள்ளாட்சித் தோ்தலிலும் வேட்பாளா்களை மிரட்டுவதும் அவா்களைக் கடத்தும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. அவற்றையும் கண்காணித்து பாதுகாப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: காங்கிரஸ்- பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை!

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT