புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், புதுக்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கிரவுண் சிட்டியும் இணைந்து நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின.
கீழ ராஜவீதி, வடக்கு ராஜவீதி ஆகிய பகுதிகளில் சென்ற இந்தப் பேரணி, டவுன்ஹாலில் நிறைவு பெற்றது. இதில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் அக்பர், கோகுல், பள்ளி முதல்வர் எஸ். பாரதிராஜா, ஒருங்கிணைப்பாளர் எஸ். கிருபா ஜெயராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.