புதை சாக்கடைத் திட்ட பணிகளை முறையாக பராமரிக்க வலியுறுத்தல்
புதுக்கோட்டை நகரில் செயல்படுத்தப்பட்டுள்ள புதை சாக்கடைப் பணிகளை முறையாக நகராட்சி நிர்வாகம்
புதுக்கோட்டை நகரில் செயல்படுத்தப்பட்டுள்ள புதை சாக்கடைப் பணிகளை முறையாக நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை நகரம் காமராஜ்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளைப் பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி நிர்வாகம் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். கஜா புயலால் சேதமடைந்த சிறுமின் விசை இறைப்பானை சீரமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, எஸ். ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வி. சிங்கமுத்து, நகரச் செயலர் மா. உலகநாதன் உள்ளிட்டோரும் பேசினர். முன்னதாக கனகராஜ் வரவேற்றார். முடிவில் எம். குமார் நன்றி கூறினார்.