புதுக்கோட்டை

முத்துக்குடாவில் கடலோர பாதுகாப்பு தினம் கொண்டாட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் கடற்கரை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட  முத்துக்குடா கடற்கரை கிராமத்தில்  கடலோர பாதுகாப்பு குழுமத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவிற்கு மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அன்னலெட்சுமி தலைமை வகித்தார்.
உதவி ஆய்வாளர்கள் பா.ரகுபதி, ஜவஹர், ராஜ்குமார் மற்றும் காவலர்கள், மத்திய வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்பு நிறுவன அலுவலர்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்வது, மரக்கன்றுகள் நடவு போன்ற பணிகளை மேற்கொண்டனர்.  கடலோர பாதுகாப்பு குழுமத்தின் வெள்ளி விழா விளக்க துண்டு பிரசுரம் வழங்கியும்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT