புதுக்கோட்டை

பணியின்போது வங்கி மேலாளர் மரணம்

DIN

புதுக்கோட் டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் பணியில் இருந்த மேலாளர் மாரடைப்பு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் கனகராஜ்(58). இவர்,  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் உள்ள வங்கி  கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இந்த வங்கியின் கறம்பக்குடி கிளைக்கு கடந்த  ஒரு  வாரத்துக்கு முன்பு பணியிடமாறுதல் பெற்று வந்து கனகராஜ் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமை தனது அறையில் அலுவலக பணியைக் கவனித்துக் கொண்டிருந்த கனகராஜூக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  வங்கி ஊழியர்கள், கனகராஜை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு,  பரிசோதனை செய்த மருத்துவர்கள்,  கனகராஜ்  இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT