புதுக்கோட்டை

மொலாசஸ் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

DIN


தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து மொலாசஸ் ஏற்றி வரப்பட்ட புதுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து மொலாசஸ் ஏற்றிக் கொண்டு ஒரு டேங்கர் லாரி புறப்பட்டது. இதனை சிவகங்கையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் ஓட்டி வந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு புதுக்கோட்டை சிப்காட் அருகே லாரியை நிறுத்தி விட்டு ஓட்டுநர் அருகே உணவருந்த சென்றதாகத் தெரிகிறது. அப்போது முறையாக பிரேக் போடவில்லையென்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லாரி நகர்ந்து சாலையோரத்திலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் மொலாசஸ் இருந்ததால் தீப்பற்றிவிடுமோ என்ற அச்சத்தில் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT