புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் ஆதரவற்ற இரு மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க திருமயம் பாரத மிகுமின் நிலைய ஊழியர்கள் சனிக்கிழமை உதவி வழங்கினர்.
அரிமளத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி எ. பாண்டியன் (35) , அரிமளம் கீரணிப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி எம். பெருமாள் (34). பெற்றோரின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த இருவருக்கும் திருமயம் பாரத மிகு மின்நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சமூக சேவை அறக்கட்டளை மூலம் தலா ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பெட்டிக்கடை, அதற்கான பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், பெல் நிறுவன ஊழியர்கள் தணிகைமலை,பாலாஜி, நீலகண்டன், குணசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.