புதுக்கோட்டை

விராலிமலையில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

DIN

வாக்களிப்பதன்  அவசியம் குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி விராலிமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது
இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். சிவதாஸ் பேரணிக்குத் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். விராலிமலை வட்டாட்சியர் சதீஷ்சரவணகுமார் முன்னிலை வகித்தார்.
விராலிமலை காமராஜர் நகரில் தொடங்கிய பேரணி , புதிய பேருந்து நிலையம்,கடைவீதி வழியாக சென்று சோதனைச்சாவடியில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற வருவாய்த்துறையினர், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT