புதுக்கோட்டை

பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா

DIN

பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
சிறப்புபெற்ற இக்கோயிலில் நிகழாண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கி, சனி,ஞாயிறு என மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை காலை பட்டமரத்தானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 
தொடர்ந்து மாலை நகரின் பல்வேறு வீதிகளைச் சேர்ந்த  பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து பட்டமரத்தானுக்கு சாத்தி வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸார் செய்தனர். ஏற்பாடுகளை பட்டமரத்தான் விழாக்குழுவினர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கணை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT