பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
சிறப்புபெற்ற இக்கோயிலில் நிகழாண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கி, சனி,ஞாயிறு என மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை காலை பட்டமரத்தானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மாலை நகரின் பல்வேறு வீதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து பட்டமரத்தானுக்கு சாத்தி வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸார் செய்தனர். ஏற்பாடுகளை பட்டமரத்தான் விழாக்குழுவினர் செய்தனர்.