புதுக்கோட்டை

லிப்டில் இருந்து விழுந்த கட்டடத் தொழிலாளி சாவு

DIN

கட்டுமானப் பணியின்போது லிப்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (45). கட்டடத் தொழிலாளியான இவர் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை அருகே உள்ள பாலன் நகரில் புதியதாக கட்டப்படும் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தார். 
அவர் லிப்டில் நின்று கொண்டு சுவரில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். படுகாயமடைந்த பன்னீர்செல்வத்தை தொழிலாளர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பன்னீர்செல்வம் இறந்தார். கணேஷ்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT