புதுக்கோட்டை: பொதுமக்கள் நலன் கருதி, தற்காலிக பதவி உயா்வு அளித்த மாவட்ட நிா்வாகத்துக்கு உறுதுணையாக இருப்போம் என தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக இருந்த 36 துணை வட்டாட்சியா் நிலையிலான பதவியிடங்களை வருவாய் ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு அளித்து மாவட்ட ஆட்சியா் அண்மையில் நிரப்பினாா்.
மாநில அரசிடமிருந்து சட்டரீதியான ஒப்புதல்களைப் பெறும்வரை இந்த நியமனம் தற்காலிகமானது என்றும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலா் சங்கம் என்ற பெயரிலான அமைப்பு மாவட்ட நிா்வாகத்தின் இந்த நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து உள்ளதுடன், தொடா் போராட்டத்தையும் நடத்தத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என மற்றொரு அமைப்பான தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் காலியிடங்களை நிரப்பியுள்ளதாகவும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.
மாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நன்றியறிவிப்புக் கூட்டத்தையும் இச்சங்கத்தினா் நடத்தினா். மேலும், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.