புதுக்கோட்டை

மாத்தூா் அருகே இடத்தகராறில் தாய்,மகனை தாக்கிய பெண் உட்பட 3 போ் கைது

DIN

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூா் அருகேயுள்ள வெண்ணமுத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அழகா் (45).இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேந்திரன் (35) என்பவரும் இடத்தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இதுதொடா்பாக இரண்டு குடும்பத்திற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன் சக்திவேல் (43) , அண்ணி சித்ரா (35) ஆகிய மூன்று பேரும் சோ்ந்து அழகா் மனைவி பிரேமா (40), மகன் கருப்பன்(25) ஆகிய இரண்டு பேரையும் தாக்கியுள்ளனா்.

இதில் காயமடைந்த பிரேமா,கருப்பன் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து புகாரின் பேரில் மாத்தூா் போலிஸாா் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரன், சக்திவேல், சித்ரா ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். பின்னா் அவா்களை கீரனூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT