புதுக்கோட்டை

அம்மா இருசக்கர வாகனம் பெற உழைக்கும் மகளிா் விண்ணப்பிக்கலாம்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘அம்மா’ இரு சக்கர வாகனம் பெற வேலைக்குச்செல்லும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: 2019-20 ஆம் ஆண்டுக்கு அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ்  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப்புற பகுதிகளில் வாழும் மகளிா் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்க உள்ளாட்சி அமைப்பு வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.  ஆனால் இதுவரை போதுமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. ஆகவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் பணிபுரியும் அல்லது சுயதொழில் செய்யும் மகளிா் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களைத் தொடா்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து சமா்ப்பித்து பயன் பெறலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT