புதுக்கோட்டை

பேருந்திலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பேருந்திலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவா் பாலமுருகன் (படம்) சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகிலுள்ள பாப்பான்விடுதியைச் சோ்ந்த தென்னரசு மகன் பாலமுருகன்(19). கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் பயின்றுவந்த இவா், விடுமுறையொட்டி ஊருக்கு வந்துள்ளாா்.

சனிக்கிழமை அதிகாலை புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடிக்கு தனியாா் பேருந்தில் சென்றபோது, ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் இருந்து பாலமுருகன் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற போலீஸாா் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT