புதுக்கோட்டை

புதுகையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப்பணி  புறக்கணிப்பு

DIN

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி  வி.கே. தஹிலராமாணீயின்  இடமாற்றத்தைக் கண்டித்து , புதுக்கோட்டை வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹிலராமாணீ  மேகாலயா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவரது மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.தலைமை நீதிபதியின் இடமாற்றத்தைக் கண்டித்து தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ,அனைத்துக் கீழமை நீதிமன்றங்களிலும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்ய அழைப்புவிடுக்கப்பட்டது.
இதன்படி, புதுக்கோட்டை வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகள் புறக்கணிக்கப்பட்டன. இதனால் நீதிமன்றப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT