புதுக்கோட்டை

விபத்து, மீட்பு முதலுதவிப் பயிற்சி

DIN

புதுக்கோட்டையில் செவிலியர்கள், மருத்துவமனைப் பணியாளர்களுக்கான விபத்து மற்றும்  அவசர சிகிச்சைக்கான முதலுதவிப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய மயக்கவியல் மருத்துவர் சங்கம், இந்திய மருத்துவச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய பயிற்சித் தொடக்க விழாவுக்கு, இந்திய மருத்துவச் சங்க தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். செயலர் சலீம் முன்னிலை வகித்தார். மயக்கவியல் மருத்துவர் சங்கச் செயலர் மு. பெரியசாமி உள்ளிட்டோர் பயிற்சியளித்தனர்.
 விபத்தில் சிக்கியோருக்கு இருதயத்தை இயங்க வைக்கும் முறை, செயற்கை சுவாசம் வழங்கும் முறை, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக எடுத்து செல்லும் முறைகள் குறித்த பயிற்சியும், சாலை விபத்து, தீக்காயம், விஷக்கடி, மின்சார விபத்து ஆகியவற்றுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. 
இதில் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பலர்
 கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT