மாத்தூர் அருகேயுள்ள தொண்டைமான்நல்லூரில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த சேக் மன்சூர் மகன் அஷ்ரப் அலி (32). பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவரது கடைக்கு சென்னை எண்ணூரைச் சேர்ந்த இக்பால் மகன் அம்ஜத் கான்(34) வந்தார். பின்னர் அவர் அஷ்ரப்அலியிடம் பேசிக்கொண்டே அம்ஜத்கான் திடீரென கடையின் கல்லாப்பெட்டியில் இருந்து ரூ.200 -ஐ எடுத்து தனது சட்டைப்பையில் வைத்தார்.
இதைபார்த்த அஷ்ரப்அலி அவரைப் பிடித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து, அங்கு வந்த மாத்தூர் காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் போலீஸார் அம்ஜத் கானைக் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அம்ஜத்கானை கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.