புதுக்கோட்டை

பெட்டிக்கடையில் பணம் திருடிய இளைஞர் கைது

DIN


 மாத்தூர் அருகேயுள்ள தொண்டைமான்நல்லூரில்  கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த சேக் மன்சூர் மகன் அஷ்ரப் அலி (32).  பெட்டிக்கடை வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை  இரவு அவரது கடைக்கு சென்னை எண்ணூரைச் சேர்ந்த இக்பால் மகன் அம்ஜத் கான்(34) வந்தார். பின்னர் அவர்  அஷ்ரப்அலியிடம்  பேசிக்கொண்டே அம்ஜத்கான் திடீரென கடையின்  கல்லாப்பெட்டியில் இருந்து  ரூ.200 -ஐ எடுத்து தனது சட்டைப்பையில் வைத்தார். 
இதைபார்த்த அஷ்ரப்அலி அவரைப் பிடித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து, அங்கு வந்த மாத்தூர் காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் போலீஸார்  அம்ஜத் கானைக்  கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர்  இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அம்ஜத்கானை கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT