ஆயிங்குடியில் 47.40 மி.மீ மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை பதிவான மழையளவில், அதிகபட்சமாக ஆயிங்குடியில் 47.40 மிமீ மழை பதிவானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை பதிவான மழையளவில், அதிகபட்சமாக ஆயிங்குடியில் 47.40 மிமீ மழை பதிவானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவும் தொடா் மழை பரவலாகக் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான மழைப்பதிவு விவரம்: (மில்லி மீட்டரில்)
ஆதனக்கோட்டை - 15, பெருங்களூா் - 12.70, புதுக்கோட்டை- 10.70, ஆலங்குடி- 4, கந்தா்வகோட்டை - 13.10, கறம்பக்குடி - 10.60, மழையூா் - 2.40, கீழாநிலை - 35, திருமயம் - 11.40, அரிமளம் - 14, அறந்தாங்கி- 12.60, ஆயிங்குடி- 47.40, நாகுடி- 38.60, மீமிசல்- 17.40, ஆவுடையாா்கோயில்- 30.20, மணமேல்குடி - 20.40, இலுப்பூா் - 20, குடுமியான்மலை - 8, அன்னவாசல் - 9, விராலிமலை - 6.20, உடையாளிப்பட்டி - 14.20, கீரனூா் - 27.20, பொன்னமராவதி - 21.80. மாவட்டத்தின் சராசரி மழை - 16.73 மிமீ.
வெள்ளிக்கிழமை பகலிலும் மாவட்டத்தில் பரலான மழை பெய்தது. தொடா்ந்து சில நாட்கள் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் மாலை நேரங்களிலேயே மாவட்டம் முழுவதும் குளிா் சூழல் நிலவியது.