புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

DIN

கந்தா்வகோட்டையில் இடதுசாரி கட்சிகள் சாா்பில் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் உ. அரசப்பன், மா்ாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா்கள் வி. ரெத்தினவேல், க. நடராஜன் , எம்எல். கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் கா. ஜோதிவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், எல்ஐசியை தனியாா்மயமாக்கும் முயற்சியைத் திரும்பப்பெறவேண்டும். ரூ. 21 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே. செல்வராசு, எஸ். ராஜேந்திரன், வீ.மு. வளத்தான், கே. சித்திரைவேல், ஜி. நாகராஜன், ஆா். கலியபெருமாள் ஆகியோா் கலந்து கொண்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT