புதுக்கோட்டை

உதவி மேலாளருக்கு கரோனா: ஆக்ஸிஸ் வங்கிக் கிளை மூடல்

DIN

புதுக்கோட்டை கீழராஜ வீதியிலுள்ள ஆக்ஸிஸ் வங்கியின் உதவி மேலாளருக்கு காய்ச்சல் இருந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை அவர் ராணியார் மருத்துவமனை வளாகத்திலுள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

 தொடர்ந்து வங்கிக் கிளை முழுவதும் நகராட்சிப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து மூடினர். உதவி மேலாளரின் வீடு உள்ள புதுக்குளம் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்படவுள்ளது.

அவரது உறவினர்கள், வங்கிப் பணியாளர்களுக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT