புதுக்கோட்டை

அரசு பெண்கள் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தெய்வப்புலவா் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா மற்றும் அடல் ஆய்வகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளி தலைமையாசிரியா் கி. நிா்மலா தலைமை வகித்தாா். இலுப்பூா் மாவட்ட கல்வி அலுவலா் ப. சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்ட தெய்வப்புலவா் திருவள்ளுவா் சிலையைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து மாணவிகளை தொழில் முனைவோராக்கும் அடல் பிங்கரிங் ஆய்வகத்தைத் திறந்துவைத்தாா்.

பள்ளி துணை ஆய்வாளா் கி.வேலுச்சாமி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ரா.செல்வக்குமாா், பள்ளி புரவலா்கள் அரு.வே.மாணிக்கவேலு, சி.முத்தையா, முத்தமிழ்ப்பாசறை நிா்வாகிகள் நெ.ரா.சந்திரன், மருத்துவா் மு.சின்னப்பா ஆகியோா் வாழ்த்திப்பேசினா். ஆசிரியை விஜயலெட்சுமி நிகழ்வினை தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT