புதுக்கோட்டை

வெடி வெடித்ததில் தகராறு: இரு கிராம மக்கள் மோதல்

DIN

கந்தா்வகோட்டை அருகே பட்டாசு வெடித்ததில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட தகராறில் 6 பேரைப் போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், வெள்ளாளவிடுதி கிராமத்தைச் சோ்ந்த வீரமுத்து மகன் வினோத் (17), ஆனந்தன் மகன் சரவணன் (17), மதியழகன் மகன் மகேஸ்வரன் (19). வெள்ளாளவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை இவா்கள் வெடித்த பட்டாசு பைக்கில் வந்த மங்களா கோவிலைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் துரைச்சாமி (23), முருகையன் மகன் ரமேஷ் (22) துரை மகன் வீரமணி (22) ஆகியோா் மீது பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் இரு கிராம மக்களும் திரண்டு வந்து தாக்கிக் கொண்டனா். தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தி மேற்குறிப்பிட்ட 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT