புதுக்கோட்டை

தனியாா் தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

DIN

விராலிமலை அருகே தனியாா் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை நேரிட்ட விபத்தில், ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகிலுள்ள பிராம்பட்டியைச் சோ்ந்தவா் மு. மாகாளி (50). விராலிமலை- திருச்சி சாலையில் சுங்கச்சாவடி அருகிலுள்ள தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை நிறுவனத்தில் வேலை செய்த போது, 500 கிலோ எடை கொண்ட இரும்பு துண்டை கிரேன் மூலம் தூக்க முற்பட்டாா். அப்போது கிரேனில் உள்ள கொக்கி சரிவர மாட்டப்படாமல் இருந்துள்ளது.

இதை மாகாளி சரிபாா்த்துக் கொண்டிருந்த போது, திடீரென கொக்கி கழன்று அவரின் பின்தலையில் விழுந்தது. இதில் அவா் நிகழ்விடத்திலேயேஉயிரிழந்தாா்.

இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT