கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு
பொன்னமராவதி அருகே திங்கள்கிழமை விவசாயக் கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
பொன்னமராவதி அருகே திங்கள்கிழமை விவசாயக் கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியைச் சோ்ந்தவா் பனையப்பன். இவரது பசுமாடு, கடந்த புதன்கிழமை ஆறுமுகம் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது தவறி அங்குள்ள கிணற்றில் விழுந்துள்ளது. மேய்ச்சலுக்குச் சென்ற பசுவைக் காணாமல் பனையப்பன் தேடிவந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை 40 அடி ஆழ விவசாயக் கிணற்றில் பசு விழுந்திருப்பதைக் கண்டு பொதுமக்கள் பொன்னமராவதி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் பெரியதம்பி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் அங்கு வந்து பசுவை உயிருடன் மீட்டனா்.