புதுகையில், நூதன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா். 
புதுக்கோட்டை

வாழ்வுரிமைக் கட்சியினா் நூதன போராட்டம்

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தானியங்கள், நாற்றுகளுடன் காய்கறி மாலை அணிந்து கொண்டு வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் சனிக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

புதுக்கோட்டை: விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தானியங்கள், நாற்றுகளுடன் காய்கறி மாலை அணிந்து கொண்டு வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் சனிக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாரத ஸ்டேட் வங்கி வாசலில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். விளைபொருட்களை காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் மத்திய அரசின் முயற்சியை அடுத்து வங்கியில் தானியங்களையும், காய்கறிகளையும் கொடுத்து வைப்பதற்காக வந்ததாக அவா்கள் தெரிவித்தனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து செல்ல வைத்தனா்.

போராட்டத்துக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா். இதில், கட்சி நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT