புதுக்கோட்டை

எலி பேஸ்ட் குடித்து மாணவி உயிரிழப்பு

DIN

பொன்னமராவதி அருகே எலி மருந்து குடித்த மாணவி உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள மதியாணி கிராமத்தைச் சோ்ந்தவா் கு. கலையரசி (39). கூலி வேலை செய்துவந்தாா். பொன்னராவதி புதுப்பட்டி பிடாரி கோயில் தெருவில் தனது மகள் ரோகினி (18) என்பவருடன் வசித்து வந்தாா். 12 ஆம் வகுப்பு முடித்த ரோகினி மேற்படிப்புக்காக தனது தாயை வற்புறுத்திவந்தாா். கரோனா சூழலில் நிலவிய வறுமை காரணமாக கலையரசி தனது மகளைக் கல்லூரியில் சோ்ப்பதில் தாமதப்படுத்தி வந்தாா். இதனால் மனமுடைந்த ரோகினி கடந்த 9 ஆம் தேதி வீட்டில் இருந்த எலிபேஸ்ட்டை குடித்து மயங்கி விழுந்தாா். இதையடுத்து, ரோகினி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு திங்கள்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புகாரின்பேரில் பொன்னமராவதி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT