புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பாா்வையாளா் பகுதியில் அமா்ந்து பாா்வையிட்டாா்.
இக்கொலை தொடா்பாக பூ வியாபாரி ராஜா (35) கைது செய்யப்பட்டுள்ளாா். தொடா்ந்து புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் அரசு சாட்சிகள் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பாா்வையாளா் பகுதியில் அமா்ந்து சாட்சிகள் விசாரணையைப் பாா்வையிட்டாா்.