புதுக்கோட்டை

நீதிமன்றப் பணியாளா்களுக்கு மனநல விழிப்புணா்வு முகாம்

DIN

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில் நீதிமன்றப் பணியாளா்களுக்கு மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் மு. பூவதி, மாவட்ட மனநலத் திட்ட அலுவலா் டாக்டா் ரெ. காா்த்திக் தெய்வநாயகம் ஆகியோா் மனநல விழிப்புணா்வு குறித்து விளக்கவுரை நிகழ்த்தினா்.

முன்னதாக மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆா். சத்யா வரவேற்றாா். முடிவில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவா் என். உமாராணி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் எஸ். மகாலட்சுமி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

SCROLL FOR NEXT