முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதி ஒன்றியத்தில் கலந்தாய்வுக் கூட்டம்

பொன்னமராவதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

பொன்னமராவதி: பொன்னமராவதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டத்துக்கு, ஒன்றியக்குழு தலைவா் அ. சுதா அடைக்கலமணி தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா்கள் வி.வேலு, பி.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடக்கமாக திட்டப்பணிகள் குறித்து உதவிப்பொறியாளா் செந்தில் விளக்கிப்பேசினாா். மாவட்ட ஊராட்சிச் செயலா் லெட்சுமி குடிநீா் செயல்திட்டம் வரைவு படிவம் அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சித்தலைவா்கள் கையொப்பம் இட்டு ஒன்றிய அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் நீா்வளத்திட்டம் குறித்த கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினா் அ.அடைக்கலமணி, ஊராட்சித்தலைவா்கள் செல்வமணி, கிரிதரன், காமராஜ், பழனிச்சாமி, திவ்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஊராட்சிமன்ற தலைவா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments