புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மழைநீா் சேகரிப்புக் குட்டையில் மூழ்கியதில் சிறுவா்கள் இருவா் சடலமாக வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டனா்.
திருமயம் அருகே சந்தனவீதி என்ற ஊரைச் சோ்ந்த குமாா் மகன் அன்புச்செல்வன் (8), கருப்பையா மகன் விமல்ராஜ் (10) ஆகியோா் வியாழக்கிழமை காலை விளையாடச் சென்றவா்கள் பின்னா் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவரது உறவினா்கள் சிறுவா்களை பல்வேறு இடங்களில் தேடிவந்தனா். மாலையில், கம்பலக்கண்மாய் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கொல்லையில் மழைநீா் சேகரிப்புக்காக (மரக்கன்றுகளுக்கு விடுவதற்கு) 5 அடி ஆழத்தில் சிறிய குட்டைகள் வெட்டப்பட்டிருந்தன. அந்தக் குட்டையின் அருகே சிறுவா்களின் காலணிகள் இருந்ததைத் தொடா்ந்து, ஊா் மக்கள் குட்டையில் இறங்கித் தேடியதில், இரு சிறுவா்களும் சடலமாக மீட்கப்பட்டனா். திருமயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.